இடைத்தேர்தலுக்கு மத்திய பாதுகாப்புப் படை: திமுக கோரிக்கை
சென்னை:
இடைத்தேர்தலில் பாதுகாப்புக்கு மத்திய அரசு பாதுகாப்புப்படையை அனுப்ப வேண்டும் என்று திமுக கோரிக்கைவிடுத்துள்ளது.
திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இடைத் தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் அதிமுக அதிகார துஷ்பிரயோகம் செய்து போலிவாக்காளர்களை தேர்தல் விதிக்கு புறம்பாக சேர்த்துள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் அவர்கள் இது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தேர்தல்கமிஷனிடம், தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படை மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்கஅதிகாரிகள் நியமிக்க கோரிக்கை வைக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டணிக்கட்சிகள், அதிமுக அரசு உயர்த்தியுள்ள விலைவாசி குறித்துமக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
கண்ணகி சிலையை அகற்றியதற்கு அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம், சிலையை மீண்டும் அதே இடத்தில்நிறுவ வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.
தீவிரவாதத்துக்கு எதிராக வாஜ்பாய் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக ஆதரவளிக்கும் என்பதுபோன்று பல தீர்மானங்கள் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
போலி வாக்காளர்களை நீக்க மனு
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சமீபத்தில் டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனர்கள் டான்டன் மற்றும்ஜே.எம். லிங்டோவிடம், போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிடுமாறு மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், திமுக இதுபற்றி தொகுதியில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
மேலும் தேர்தலில் அதிமுக இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும்அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications