For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலை கோவிலில் எருமை மாடு? - தமிழகம் முழுவதும் பதட்டம்

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

திருவண்ணாமலைக் கோவிலில் எருமை மாடு புகுந்து விட்டதாக வதந்தி கிளம்பியதையடுத்து தமிழகம் முழுவதும்பதட்டம் நிலவியது.

திருவண்ணாமலை அருணகிரீஸ்வரர் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு எருமை மாடு புகுந்து விட்டதாக வதந்திதமிழகம் முழுவதும் பரவியது. அதனால் தமிழகத்துக்கு தோஷம் வந்து விட்டதாகவும் தமிழக மக்கள் நம்பினர்.

அதனால் எல்லோர் வீட்டு வாசலிலும் வேப்பிலை கட்டி வைக்குமாறும், வீட்டினுள் தீபம் ஏற்றி வைக்குமாறும்வதந்தி வேகமாக பரவியது.

தமிழகம் முழுவதும் பல வீடுகளில் இதற்காக சிறப்பு யாகம் எல்லாம் நடத்தினார்கள்.

இந்நிலையில், கோவிலில் மாடு புகுந்து விட்டது என்பது தவறான செய்தி. மக்கள் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X