இந்திய-பாக். பிரச்சனையில் 3வது நாடு தலையிடக் கூடாது: பிளேர்
டெல்லி:
இந்தியாவுக்குப் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சனையில் 3வது நாடு தலையிடக் கூடாது என்றுஇங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் கூறினார்.
டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பிளேர் பேச்சுநடத்தினார்.
பின்னர் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் டெல்லி பிரகடனத்தில் இரு நாட்டு பிரதமர்களும்கையெழுத்திட்டனர்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் காஷ்மீர் சட்டசபைத் தாக்குதலுக்கும் காரணமான தீவிரவாதிகள் கட்டயாம்தண்டிக்கப்பட வேண்டும் என்று இப்பிரகடனம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதம் எங்கே, எப்படி இருந்தாலும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று பிளேர் மீண்டும்வலியுறுத்தினார்.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா விரைவில் தயாராகும் என்றும் பிளேர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால்தான் காஷ்மீர் பிரச்சனை உள்படஅனைத்துப் பிரச்சனைகளைப் பற்றியும் அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று வாஜ்பாய்தெளிவாகக் கூறிவிட்டார்.
இன்று பாகிஸ்தான் செல்கிறார் பிளேர்:
இந்நிலையில் இன்று பிற்பகல் பாகிஸ்தானுக்குச் செல்கிறார் பிளேர்.
இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பைச் சந்திக்கும் பிளேர், இந்திய-பாகிஸ்தானுக்குஇடையே தற்போது நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவார்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்முஷாரப்பிடம் பிளேர் வலியுறுத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications