கன்னியாகுமரி அருகே சிறுமி கற்பழித்துக் கொலை: 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் என்ற இடத்தில் 10 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற வழக்கில் 2பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் அருள் ஒய்ஸ்லின். நான்காவது வகுப்பு படித்து வந்த இந்த 10 வயது சிறுமியைஜனவரி 4ம் தேதி சிலர் கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்து குளம் ஒன்றில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

தமிழகத்தையே பரபரபரப்புக்குள்ளாக்கியது இந்த சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துகுற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.

அதில் உலகளந்தபெருமாள், செல்வமணி ஆகிய இருவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களைவிசாரித்த போது, சம்பவத்தனறு இவர்கள் இருவரும் அந்த சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டி கற்பழித்துள்ளனர்.

அந்த சிறுமி சத்தம் போட்டு உள்ளார், அதனால் சத்தம் வராமல் இருப்பதற்காக சிறுமியின் வாயைப்பொத்தியுள்ளனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் சிறுமியை அருகில் உள்ள குளக்கரையில் வீசிஉள்ளனர்.

அப்போது தண்ணீர் பட்டு சிறுமி மயக்கம் தெளிந்ததால், குளக்கரையில் வைத்து சிறுமியின் கழுத்தில் காலால்மிதித்து கொலை செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+