2வது நாளாக காஸ் லாரிகள் ஸ்டிரைக்: சமையல் காஸ் தட்டுப்பாடு அபாயம்
சென்னை:
வாடகை நிலுவைத் தொகையை வழங்கக் கோரி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் இன்று (செவ்வாய்க்கிழமை)தொடர்ந்து 2வது நாளாக நீடித்துள்ளது.
இந்த ஸ்டிரைக் மேலும் நீடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் சமையல் காஸ் விநியோகம்செய்து வருகின்றனர். சமையல் காஸ் சப்ளை செய்வதற்காக எல்.பி.ஜி. தனியார் டேங்கர் லாரிகளை குத்தகைஅடிப்படையில் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மூவாயிரம் லாரிகள் காஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தலாரிகளுக்கான நிலுவைத் தொகை லட்சக்கணக்கில் உள்ளது.
இதை உடனடியாக வழங்கக் கோரி டேங்கர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சேலம் சமையல் காஸ் நிரப்பும் பிரிவுக்கு டேங்கர் லாரிகளில் திரவவடிவில் பெட்ரோலியம் காஸ் அனுப்பப்படுவது வழக்கும்.
பிறகு சேலத்தில் திரவ வடிவில் இருப்பதை வாயு வடிவில் சிலிணடர்களில் அடைத்து வெளியூர்களுக்கு லாரிகள்மூலம் அனுப்பப்படும்.
இப்போது சேலத்தில் மூன்று நாட்களுக்கு தேவையான திரவ வடிவிலான காஸ் மட்டுமே உள்ளது. எனவே லாரிஸ்டிரைக் நீடிக்கும்பட்சத்தில் மாநிலத்தில் கடும் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications