For Daily Alerts
Just In
வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற 3 இலங்கை அகதிகள் கைது
மதுரை:
போலி சான்றிதழ் மூலம் வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற 3 இலங்கை அகதிகள் மதுரை போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை நெடுந்தீவுப்பகுதியை சேர்ந்த அகதி சதானந்தன். இவர் மதுரையில் அகதிகள் முகாமில் உள்ளார்.
இவர் மும்பைக்கு சென்று அங்கிருந்து வெளிநாடுக்கு செல்வதற்கு போலியான போலீஸ் சான்றிதழ் வைத்திருந்ததைமும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மதுரை போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மதுரை போலீசார் மும்பைக்கு சென்றுநேற்று (திங்கள்கிழமை) சதானந்தத்தைக் கைது செய்தனர்.
சதானந்தத்திடம் விசாரித்ததில் அவருக்கு உதவி செய்த மேலும் 2 இலங்கை அகதிகளை மதுரையில் போலீசார்கைது செய்தனர்.
போலி சான்றிதழில் மதுரை எஸ்.பியான ஆயுஷ்மான் திவாரின் கையெழுத்தை இவர்களே போட்டுள்ளதும்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments
Story first published: Tuesday, January 8, 2002, 5:30 [IST]