இடைத் தேர்தலுக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை: டி.ஜி.பி.
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப்படைத் தேவையில்லை என்று தமிழக டி.ஜி.பியான நெய்வால்கூறியுள்ளார்.
வாக்காளர்கள் பட்டியலில் போலி வாக்காளர்கள் அதிமுகவால் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டிவருகிறது.
மேலும் இதனால் இடைத் தேர்தலில் அதிமுகவினரின் அராஜகம் நடக்க வாய்ப்புள்ளதால் மத்திய பாதுகாப்புப்படை தேவை என்று சமீபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி கடலூரில் டி.ஜி.பி. நெய்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை. தமிழக போலீசாரே சிறந்த முறையில்பாதுகாப்பை அளிப்பார்கள்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். அவனைப் பிடிக்க பொறுமையாகக்காத்திருக்க வேண்டும்.
மிக விரைவில் அவன் கைது செய்யப்படுவான் என்று நெய்ல்வால் கூறினார்.












Click it and Unblock the Notifications