For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேஷன் கார்டு கணக்கெடுப்பு திடீர் நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்காக நடத்தப்பட்டுக் கொண்டிருந்த கணக்கெடுப்புப் பணியை நிறுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை தமிழகஅரசு நேற்று (திங்கள்கிழமை) மாலை திடீரென்று எடுத்தது.

தமிழக மக்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அதன்படி இருவிதமான ரேஷன் கார்டுகளை வழங்க கடந்தஆண்டு இறுதியில் தமிழக அரசு திட்டமிட்டது.

அதன்படி மாதம் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பவர்கள்என்றும் அவர்களுக்குப் பச்சை நிறத்தில் ரேஷன் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

மற்றவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்றும் அவர்களுக் நீல நிறத்தில் கார்டு வழங்கவும்முடிவானது.

இதையடுத்து கடந்த 1ம் தேதி முதல் இதற்கான கணக்கெடுப்புப் பணி துவங்கியது. அதிகாரிகளும் அரசுஊழியர்களும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தக் கணக்கெடுப்புப் பணியை தமிழக அரசு திடீரென்று நிறுத்தியுள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களைக் கண்டறிவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும்அதற்குரிய சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என்றும் இதனால்தான் கணக்கெடுப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

புதிய கணக்கெடுப்பைத் துவங்கும் பணி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X