தப்பி ஓடி வரும் தலிபான்களை பாகிஸ்தான் பிடிக்குமா?
துஷான்பே:
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஓடிவரும் தலிபான்களைப் பாகிஸ்தான் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தொடர்ந்து குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, அங்கிருந்துநூற்றுக்கணக்கான தலிபான்களும் அல்-கொய்தா தீவிரவாதிகளும் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடுகின்றனர்.
கூட்டத்தோடு கூட்டமாக அவர்களுடன் சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனும் பாகிஸ்தானுக்குள்நுழைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.
பின் லேடனைப் பிடிப்பதற்கு பாகிஸ்தான் உதவும் என்று நம்புவதாக ஜோசப் நம்பிக்கை தெரிவித்தார்.
முல்லா ஒமர் எங்கே?
இந்நிலையில் தலிபான் தலைவர் முல்லா ஒமர் இன்னும் ஆப்கானிஸ்தானுக்குள்தான் இருக்கிறான் என்றுஅமெரிக்கா நம்புகிறது.
ஆப்கானிய மற்றும் அமெரிக்கப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வரும் ஹெல்மாண்ட் பகுதியில் இருந்ததாக சிலதகவல்கள் தெரிவித்தன.
ஆனால் முல்லா ஒமரும் பின் லேடனும் தங்கள் கையில் கிடைக்கும் வரை எந்த ஊகங்களுக்கும் இனி இடம்கொடுக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.