ஈரோட்டில் கோவில் காவலாளி கொலை - உண்டியல் பணம் கொள்ளை
ஈரோடு:
ஈரோடு அருகே கோவிலுக்குள் நுழைந்த ஒரு கும்பல, தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக கோவில்களில் உடைப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.கடந்த வாரத்தில் சிவகிரி அருகே 3 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தூர் கொடுமுடி சாலையில் அத்தனூர்அம்மன் கோவில் உள்ளது. இங்கு முன்னாள் ராணுவ வீரரான கோவிந்தசாமி (65) இரவு காவலராக பணியாற்றிவருகிறார்.
இவருடன் கோவில் துப்புறவு தொழிலாளி குமாரசாமி, பூசாரி ஜோதி ஆகியோர் திங்கள்கிழமை இரவு பூஜை முடிந்தபின் கோவில் முன் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவுக்கு மேல் கோவிலுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் படுத்திருந்த மூவரையும் சரமாரியாகதாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காவலாளி அந்த இடத்திலேயே இறந்து விட்டார். மற்றஇருவரும் மயக்கமடைந்து விட்டனர்.
பிறகு அந்த கும்பல் கோவிலினுள் இருந்த இரண்டு உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துதப்பி விட்டது. மயக்கம் தெளிந்த பின் காயமடைந்த இருவரும் போட்ட அலறல் சத்தத்தில், கோவிலுக்கு அருகில்வசிப்பவர்கள் உள்ளே சென்று அவர்களை மீட்டனர்.
இவர்கள் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது நிலையும் மிகக்கவலைக்கிடமாக உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் பொங்கல் திருவிழா இரண்டு தினங்களுக்கு முன்பு தான் முடிந்தது.திருவிழா முடிந்தவுடன் உண்டியல் திறக்கப்படும்.
ஆனால் இப்போது உண்டியலை திறப்பதற்கு முன்னரே கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.அந்த உண்டியல்களில் சுமார் ரூ.20,000 இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில்தான் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் கொள்ளையர்கள் புகுந்து 2 உண்டியல்களைக்கொள்ளையடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications