ஈரோட்டில் கோவில் காவலாளி கொலை - உண்டியல் பணம் கொள்ளை
ஈரோடு:
ஈரோடு அருகே கோவிலுக்குள் நுழைந்த ஒரு கும்பல, தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக கோவில்களில் உடைப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.கடந்த வாரத்தில் சிவகிரி அருகே 3 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தூர் கொடுமுடி சாலையில் அத்தனூர்அம்மன் கோவில் உள்ளது. இங்கு முன்னாள் ராணுவ வீரரான கோவிந்தசாமி (65) இரவு காவலராக பணியாற்றிவருகிறார்.
இவருடன் கோவில் துப்புறவு தொழிலாளி குமாரசாமி, பூசாரி ஜோதி ஆகியோர் திங்கள்கிழமை இரவு பூஜை முடிந்தபின் கோவில் முன் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவுக்கு மேல் கோவிலுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் படுத்திருந்த மூவரையும் சரமாரியாகதாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காவலாளி அந்த இடத்திலேயே இறந்து விட்டார். மற்றஇருவரும் மயக்கமடைந்து விட்டனர்.
பிறகு அந்த கும்பல் கோவிலினுள் இருந்த இரண்டு உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துதப்பி விட்டது. மயக்கம் தெளிந்த பின் காயமடைந்த இருவரும் போட்ட அலறல் சத்தத்தில், கோவிலுக்கு அருகில்வசிப்பவர்கள் உள்ளே சென்று அவர்களை மீட்டனர்.
இவர்கள் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது நிலையும் மிகக்கவலைக்கிடமாக உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் பொங்கல் திருவிழா இரண்டு தினங்களுக்கு முன்பு தான் முடிந்தது.திருவிழா முடிந்தவுடன் உண்டியல் திறக்கப்படும்.
ஆனால் இப்போது உண்டியலை திறப்பதற்கு முன்னரே கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.அந்த உண்டியல்களில் சுமார் ரூ.20,000 இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில்தான் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் கொள்ளையர்கள் புகுந்து 2 உண்டியல்களைக்கொள்ளையடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications