இந்தியா வருகிறார் சீன பிரதமர்
பெய்ஜிங்:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள இவ்வேளையில் சீனப் பிரதமர் சூ ரோங்ஜி வரும் 13ம் தேதிஇந்தியா வருகிறார்.
முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) சீனாவிலிருந்து புறப்பட்ட ரோங்ஜி, நேராக வங்காள தேசம் செல்கிறார்.
பின்னர் 13 முதல் 18ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ரோங்ஜி, இந்தியப் பிரதமர்வாஜ்பாய், ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் மற்றும் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ஆகியோரைச் சந்தித்து பேசஉள்ளார்.
மேலும் நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் எதிர்க்கட்சிதலைவர்களையும் ரோங்ஜி சந்திக்கவுள்ளார்.
சமீபத்தில்தான் பாகிஸ்தானுக்கு 40 போர் விமானங்களை சீனா அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம்தான் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் சீனாவுக்குப் பயணம் செய்ததும் காஷ்மீர் பிரச்சனையில்சீனா தலையிடாது என்றும் ரோங்ஜி அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.