காஷ்மீர் உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீர் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை கிரினேட் குண்டுகள்மூலம் தீவிரவாதிகள் தாக்கினர். ஆனால் குறி தவறி விட்டது.

உயர் நீதிமன்றக் கட்டடத்தின் அருகே இந்த வாகனத்தைக் குறிவைத்து கிரினேட் குண்டு எறியப்பட்டது.

ஆனால் குறி தவறியதால் அந்தக் குண்டு தரையிலேயே விழுந்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்தது.

ஆனால் இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

உடனடியாக காஷ்மீர் போலீசாரும் பாராமிலிட்டரி வீரர்களும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.

இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளை மற்றொரு போலீஸ் குழுவினர் தேடி வருகின்றனர்.

ஆனால் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களில் 6 தீவிரவாதிகளும் பொதுமக்களில்ஒருவரும் கொல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+