மதவாத அமைப்புகளைத் தடை செய்ய பாகிஸ்தான் திட்டம்
இஸ்லாமாபாத்:
வரும் 13 அல்லது 14ம் தேதி தன் நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் உரையாற்றவுள்ளநிலையில், அங்குள்ள மதவாத அமைப்புகள் தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
முஸ்லீம் மதவாதிகள் என்று கூறிக்கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இந்தஅமைப்புகளை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அமைச்சர் கூறியுள்ளார்.
காஷ்மீர் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு பாகிஸ்தான்தான் அனைத்து வகைகளிலும் உதவிக்கொண்டிருப்பது தெரிந்த விஷயம்.
ஆனால் "காஷ்மீர் விடுதலை" என்கிற பெயரைப் பயன்படுத்தி மதப்போர் (ஜிகாத்) புரிவதற்கும் ஜிகாத்தின்பெயரைக் கெடுப்பதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என்று காஸி கூறினார்.
இவ்வளவும் கூறிய காஸி, எல்லைக்கு அப்பால் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்பாகிஸ்தானியர்களே அல்ல என்றும் கூறியுள்ளார்.
அவர்களுக்கு உதவிக் கொண்டிருப்பவர்களும் ஒடுக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் காஸி கூறினார்.












Click it and Unblock the Notifications