பத்திரிக்கைகளில் பாமக இருட்டடிப்பு: ராமதாஸ் கவலை
சென்னை:
பாமக தொடர்பான செய்திகளை தமிழ் பத்திரிக்கைகள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்கின்றன என பாமக நிறுவனர்ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ராமதாஸ் நிருபர்களிடம் அளித்தப் பேட்டியில்கூறியிருப்பதாவது:
பாமகவுக்கு ஆதரவான செய்திகள் பத்திரிக்கைகளில் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் எதிரான செய்திகள்வெளியிடப்படுகின்றன. பத்திரிக்கைகளில் எனது பெயரும் படமும் சிறிய அளவிலேயே வெளியிடப்படுகின்றன.
ஆங்கிலப் பத்திரிக்கைகள் நடுநிலையுடன் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் தமிழ் பத்திரிக்கைகளோஅரசியல் விருப்பு-வெறுப்புகளுடன் செய்திகளை வெளியிடுகின்றன.
இந்நிலை மாற வேண்டுமானால் பத்திரிக்கைகளில் வெளிநாட்டு முதலீடு அவசியம்.
எங்கள் கட்சி எம்.எல்.ஏ. சிவகாமி வின்சென்ட்டை அதிமுக தலைமை செயலாளர் ஓரிடத்தில் வைத்துள்ளார்.அவருக்கு பத்து போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவரை செங்கோட்டையனின் உதவியாளர் மயில்சாமி என்பவர் தான் பாதுகாத்து வருகிறார். இது குறித்துஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழக சபாநாயகர், தலைமைச் செயலாளர் உட்பட அனைவருக்கும்கடிதம் அனுப்பியுள்ளோம்.
இது குறித்து எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பொன்னுசாமி நாளை ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனுகொடுக்க உள்ளார் என்று ராமதாஸ் கூறினார்.