அதிமுக-தமாகா உறவு தொடருமா? - இன்று முடிவு
சென்னை:
அதிமுகவுடனான உறவைத் தொடர்வது குறித்து இன்று (சனிக்கிழமை) நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட உள்ளது.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தமாகா, பாமக,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அங்கம் வகித்தன.
ஆனால் தேர்தல் முடிந்த 2 மாதங்களிலேயே அதிமுகவுடனான உறவை பாமக துண்டித்துக் கொண்டது.
அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளும் அதிமுககூட்டணியிலிருந்து விலகி தனித்தனியாகப் போட்டியிட்டன.
ஆனாலும் அசைக்க முடியாத கட்சியாக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மூப்பனார்மறைவால் காலியான ராஜ்யசபா சீட்டையும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த வாரம் குட்பை சொல்லிவிட்டது. வரும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தரப் போவதில்லை என்று இக்கட்சி கூறிவிட்டது.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் தொடருமா என்ற பெரும் கேள்விக் குறியுடன் இன்று தமாகாவின்நிர்வாகக் குழு கூடுகிறது.
அதிமுகவின் தொடர்ந்த புறக்கணிப்பு, பொதுமக்களிடையே அதிமுக அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி, தமாகாதொண்டர்களின் மனநிலை ஆகியவை காரணமாக இன்றைய கூட்டத்தில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.