அணிவகுப்பு இன்றி ராணுவ தின கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வழக்கமான அணிவகுப்பு இல்லாமலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) ராணுவ தினம் கொண்டாடப்பட்டது.

கடந்த 1949 ஜனவரி 15ல் சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியான பி.சி. கரியப்பாபதவியேற்றதிலிருந்து ஆண்டுதோறும் இதே நாளில் ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ராணுவ தினத்தன்றும் ராணுவத்தினரின் அணிவகுப்புதான் "ஹைலைட்"டாக இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு எல்லையில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ராணுவத்தினர் அனைவரும் அப்பகுதிகளில்குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ராணுவ தின அணிவகுப்பு இன்று டெல்லியில் நடைபெறவில்லை. ஆனால் முப்படைத் தளபதிகளானஜெனரல் எஸ். பத்மநாபன் (ராணுவம்), எஸ். கிருஷ்ணமூர்த்தி (விமானப்படை) மற்றும் அட்மிரல் மத்வேந்திர சிங்(கடற்படை) ஆகியோர் "அமர் பவான் ஜோதி"யில் மலர் வளையம் வைத்து ராணுவ தினத்தைக் கொண்டாடினர்.

முப்படைகளின் முதன்மைத் தளபதியும் ஜனாதிபதியுமான கே.ஆர். நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் ராணுவ தின வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+