புலிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது: ஜெ. நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியாவில் பேச்சு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மத்திய அரசுஏற்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். மத்திய அரசும் பயங்கரவாதத்தைஒடுக்கப் பாடுபடுகிறது.

எனவே விடுதலைப்புலிகள் கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக ஏற்காது.

இதனால் மத்திய அரசை அதிமுக அரசு எதிர்க்கிறது என்று கருதக் கூடாது. சம்பந்தப்பட்ட பிரச்சனைக்குத் தகுந்தபடிமத்திய அரசை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்கிறது தமிழக அரசு.

மத்திய அரசு எடுக்கும் முடிவு தமிழகத்தைப் பாதிக்கும் என்று தெரிந்தால் மட்டுமே நாங்கள் எதிர்ப்போம் என்றுஜெயலலிதா கூறினார்.

விடுதலைப் புலிகள் தமிழகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ஜெயலலிதா சமீபத்தில்தான்பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+