ஆண்டிப்பட்டியிலும் இடைத் தேர்தல் ரத்தாகுமா?
சென்னை:
ஆண்டிப்பட்டியிலும் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பதால்,தேர்தலுக்கான முறையான அறிவிப்பை வெளியிடலாமா, வேண்டாமா என்று தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்துவருகிறது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் நடந்த முறைகேடு காரணமாக, சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில்இடைத் தேர்தலை தலைமை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.
ஆனால் ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல் நடக்கும் என்று அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆண்டிப்பட்டியிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள்வலியுறுத்தி வருகின்றன.
திமுக, மதிமுக உள்பட அனைத்து எதிர்க் கட்சியினரும் இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இப்பிரச்சனையில் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் கமிஷன்உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆண்டிப்பட்டித் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கான முறையான அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்டால் இன்று முதலே வேட்பு மனுத்தாக்கலும்தொடங்கும்.
அதற்குள் தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வரவில்லையென்றால் இத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாகவும்எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றன.