ஏற்காட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஜாதி சான்றிதழ் விற்பனை
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ரூ.500க்கு பூர்த்தி செய்யப்படாத ஜாதி சான்றிதழ் மற்றும் போலி சான்றிதழ்கள்சுதந்திரமாக விற்பனையாகிறது.
ஜாதி காரணமாக சிலர் அரசு பணிகளில் சேர முடிவதில்லை. இதனால் அவர்கள் போலியான சான்றிதழ் தயாரித்துவேலையில் சேர்கின்றனர். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பூர்த்தி செய்யப்படாத ஜாதிசான்றிதழ் அட்டைகள், போலி சான்றிதழ்கள் தேவைப்படுபவர்களுக்கு ரூ.500க்கு தாராளமாக விற்பனைசெய்யப்படுகிறது.
இந்த பூர்த்தி செய்யப்படாத ஜாதி சான்றிதழ் அட்டைகள், தாலுகா அலுவலகத்தில் இருக்கும் ரெக்கார்டு ரூமில்பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதை தாசில்தார்தான் பாதுகாத்து வர வேண்டும். ஆனால் இந்தசான்றிதழ்கள் ஏற்காட்டில் ஓப்பன் மார்க்கெட்டில் சரளமாக விற்கப்படுகின்றன.
இந்த ஜாதி சான்றிதழ் அட்டையை பூர்த்தி செய்து, குறிப்பிட்ட தாலுகா அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்றதாசில்தாரிடம் கையெழுத்து பெற்று, அந்த கையெழுத்தின் கீழ் தாலுகா அலுவலக முத்திரை வைத்துக் கொண்டுஅரசு அலுவலகங்களுக்கு கொடுத்து விடுகின்றனர்.
இந்த போலி ஜாதி சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்த பிறகு, அது உண்மையானதுதானா என சரிபார்க்கப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் சிக்கிக் கொள்வர். சிக்கிக் கொள்ளாதவரை அவர்களுக்குபிரச்சனையில்லை.
இது தவிர, வருமானம், இருப்பிடம், பிறப்பு, இறப்பு என அனைத்து சான்றிதழ்களும் இங்கு விற்கப்படுகின்றன.இவையெல்லாம் தாலுகா அலுவலகத்தில் இரவு காவலாளி ஒருவர் கூட்டுடன் சேர்ந்து விற்பனைசெய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.