குளத்தில் விழுந்த குழந்தை, காப்பாற்ற முயன்ற தாய் சாவு
கோயம்புத்தூர்:
கோவை அருகே உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையம் என்ற இடத்தில் குளத்தில் மூழ்கிய 2 வயது குழந்தையும்அதைக் காப்பாற்ற குதித்த தாயும் சேர்ந்து பலியானார்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது நரசிம்ம நாயக்கன் பாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்மஞ்சுளா. இவர் துணிகளை துவைத்து தரும் பணியைச் செய்து வருகிறார்.
துவைத்த துணிகளை அவரவர் வீடுகளுக்குக் கொடுக்கச் சென்றபோது தனது 2 வயதுக் குழந்தை பிரேமலதாவைவீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் வெளியே வந்துள்ளது. வீட்டுக்கு முன்பு இருந்தகுளத்திற்குச் சென்ற குழந்தை எதிர்பாராதவிதமாக குளத்தில் விழுந்தது.
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய மஞ்சுளா, தன் குழந்தையைக் காணாமல் தவித்தார். நெடு நேரம் தேடிய அவர்குளத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு குழந்தை மூச்சுத் திணறியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப்பார்த்தார்.
பதறிப் போன அவர், குழந்தையைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்தார். ஆனால் பரிதாபமாக அவரும் மூச்சுத்திணறி உயிழந்தார், குழந்தையும் பிழைக்கவில்லை.
இரண்டு உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பசோதனைக்கு அனுப்பப்பட்டன.