மலிவு விலை மதுவால் இன்னொரு சாவு
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூரில் மலிவு விலை மது அருந்தியவர் இறந்தார்.
நீடாமங்கலம் அருகே உள்ளது களஞ்சேரி என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ்.இவருக்கு வயது 45.
சமீபத்தில் தனது ஊரில் உள்ள மதுக் கடையில் மலிவு விலை மதுவை நாகராஜ் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததும், தலை சுற்றலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாகக்கூறவே அவரை குடும்பத்தினர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications