தமிழக ஆளுநராகப் பதவியேற்றார் ராம்மோகன் ராவ்
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநகராக பி.எஸ். ராம்மோகன் ராவ் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் ராம்மோகன் ராவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியான பி. சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆந்திர ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜனிடமிருந்துராம்மோகன் ராவ் பொறுப்புக்களைப் பெற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் கே. காளிமுத்து, சட்டசபை எதிர்க் கட்சித்தலைவர் க. அன்பழகன், சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று காலை திருப்பதியிலிருந்து தன் மனைவி உமாவுடன் தனி ஹெலிகாப்டர் மூலம் வந்தராம்மோகன் ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர்,
தமிழகம் எனக்கு புதிய இடமல்ல. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவன் என்ற முறையில் சென்னையும்,தமிழ்நாடும் நான் பழகிய இடங்கள் தான். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் என்ற முறையில் எனதுஅதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications