For Daily Alerts
Just In
ஒருவழியாய், 22ம் தேதி காங்கிரசில் இணைகிறார் வாழப்பாடி
சென்னை:
வரும் 22ம் தேதி காங்கிரசில் இணைகிறார் தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
இதற்காக அவரது கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரயில் மூலம் டெல்லி செல்கின்றனர்.
சோனியா காந்தியை மதுரை அல்லது சென்னைக்கு வரவழைத்து இரு கட்சிகளின் இணைப்பு விழாவையும் நடத்தத்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலையொட்டி சோனியா பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதால் அவரால் தமிழகத்து வர இயலாத நிலை உருவாகியுள்ளது.
உத்தரப் பிரதேச தேர்தல் முடியும் வரை காத்திருக்க வாழப்பாடி ராமமூர்த்தி விரும்பவில்லை. இதனால், வரும் 22ம்தேதி டெல்லியிலேயே இணைப்பு விழா நடத்த காங்கிரஸ் தலைமையும் வாழப்பாடி ராமமூர்த்தியும் முடிவுசெய்துள்ளனர்.
Comments
Story first published: Friday, January 18, 2002, 5:30 [IST]