For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு வீடு தயார்: 2 சுயேச்சைகள் மனு தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 2 சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.

இங்கு மனு தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கியது. தேனி கலெக்டர் அலுவலகத்திலும், ஆணடிப்பட்டி தாலுகாஅலுவலகத்திலும் இதற்கான வேட்பு மனுக்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தான் 2 சுயேச்சைகள் வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.

ஜெயலலிதா வரும் 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிவிரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன் போட்டியிடும் நிலையில் திமுக இன்னும் தனது வேட்பாளரையேஅறிவிக்கவில்லை.

ஜெயலலிதா தேனியில் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேனியில் மிகப்பெரிய பங்களா தயாராகிவிட்டது. பெயிண்ட் அடிக்கப்பட்டு அந்த வீட்டின் டைல்கள் மாற்றப்பட்டு, ஜன்னல்களில்எல்லாம் புதிய கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுவிட்டது.

வீட்டைச் சுற்றிய சுவர்களின் உயரமும் கூட்டப்பட்டு வருகிறது. இந்த வீடு இப்போதே போலீசாரின் பாதுகாப்பில்கொண்டு வரப்பட்டுவிட்டது.

ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போகும் தாலுகா அலுவலகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.அலுவலகத்தைச் சுற்றியும் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் இருந்து அரை கி.மீ.நீளத்துக்கு இரு புறமும் சாலைத் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X