For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவேன்: பாபா

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவேன் என சத்ய சாய்பாபா கூறினார்.

பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள சத்யசாய் மருத்துவ மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி இன்று நடந்தநிகழ்ச்சியில் பாபா பேசுகையில்,

சென்னை நகரில் தண்ணீரே இல்லை. பணக்காரர்களால் வெகு தூரத்தில் இருந்து நீரை பணம் கொடுத்து வாங்கிவிடமுடியும். ஆனால், ஏழைகள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அசுத்தமான நீரைக் குடித்துபலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனால், அந்த நகருக்குத் குடிநீர் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

பாபாவின் இந்த அறிவிப்பைக் கேட்ட அங்கு கூடியிருந்த தமிழக மக்கள் பெரும் கரகோஷம் எழுப்பி தங்கள்மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் அனந்த்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு தனது அமைப்பின்சார்பில் கோடிக்கணக்கில் பணம்செலவிட்டு குடிநீர் வழங்கியவர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது. வறட்சியில்பாதிக்கப்பட்டிருந்த இந்த கிராமங்களில் இப்போது தண்ணீர் பஞ்சமே கிடையாது.

அதே போல கர்நாடகத்தில் பெல்லாரி, அனந்த்பூரின் பிற பகுதிகள், ஆந்திராவின் கடப்பா, குர்னூல்மாவட்டங்களுக்கும் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக பாபா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X