உத்திருமேரூரில் காலராவுக்கு 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திருமேரூர் அருகே காலராவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்திரமேரூர் அருகே உள்ளது மேட்டுக் காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெருமாள், வியாழக்கிழமை இரவு காலராவால் பலியானார்.அதேபோல சோழி என்பவர் வெள்ளிக்கிழமை காலை இறந்தார். மற்றும் ஒருவரும் சிறிது நேரத்திலேயே இறந்தார்.
சம்பவம் குறித்த அறிந்ததும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 3 பேரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications