டெல்லி புறப்பட்டது அயோத்தி எச்சரிக்கை பேரணி
அயோத்தி:
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 6,500 தலைவர்கள் இன்று (திங்கள்கிழமை) காலை அயோத்தியிலிருந்டெல்லிக்கு பேரணி மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கெல்லாம் இந்தப் பேரணி அயோத்தியை விட்டுக் கிளம்பி விட்டது. பல்வேறு பஸ்கள்மூலம் பலத்த பாதுகாப்புடன் சாதுக்கள் கிளம்பினர்.
பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி, விசுவ ஹிந்து பரிஷத்இயக்கத்தினர் இந்தப் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வரும் மார்ச் 12ம் தேதி ராமர் கோவில் கட்டும் பணி ஆரம்பமாகும் என்றுஏற்கனவே விசுவ ஹிந்து அமைப்பினர் கூறியிருந்தனர்.
ஆனால், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை மத்திய அரசு கொடுத்துவிட்டால் அந்தத் தேதிக்கு முன்னதாகவேகட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று நேற்று நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அந்தத் தேதிக்குப் பின்னரும் மத்திய அரசுக்காகவோ நீதி மன்றத்தின் எந்த் தீர்ப்புக்காகவோ காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை என்று பல விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சியை "தர்ம யுத்தம்" என்று அவர்கள் அழைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications