இந்திய-பாக். படைகள் மீண்டும் துப்பாக்கி சண்டை
ஜம்மு:
சில நாட்களாக அமைதியாக இருந்து வந்த காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் படைகளுக்குஇடையே நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
மோர்ட்டார் மற்றும் மெஷின்-கன் துப்பாக்கிகள் மூலம் அவர்கள் இந்தியப் படையினரை நோக்கிச் சுட்டனர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலுக்குச் சுட்டனர்.
இன்று காலை வரையிலும் இரு தரப்பினருக்கிடையே இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்ததாக ஒரு போலீஸ்அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் இதில் யாரும் காயமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த இப்பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடக்க ஆரம்பித்துள்ளது.இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இதற்கிடையே ஜம்முவில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 3 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மது என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்ஆவர். மற்றொருவன் ஹைதர்-உல்-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவன்.












Click it and Unblock the Notifications