2 விபத்துகளில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய இடங்களில் கடந்த நடந்தசாலை விபத்துக்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்கமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இறந்தவர்களின் குடும்பத்திருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000 நிதியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.6,000நிதியும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications