ஆண்டிப்பட்டி தேர்தலை புறக்கணிக்க திமுகவுக்கு இளங்கோவன் அழைப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டியில் திமுக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக, மதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறோம். அங்கு வேட்புமனுவை வாபஸ் பெற இன்னும் நாட்கள் இருக்கிறது.
ஆண்டிப்பட்டியில் தேர்தலை புறக்கணிக்க தொகுதி மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தஉள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ளாட்சிதேர்தல் நடக்கவில்லை. இங்கு தேர்தல் நடத்தக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிகூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்.
வாழப்பாடி ராமமூர்த்தி, தனது கட்சியை கலைத்துவிட்டு டெல்லியில் சோனியா முன்னிலையில் காங்கிரஸில்இணைகிறார். இந்த இணைப்பு விழாவில் நானும் கலந்து கொள்கிறேன் என்று இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications