ஜெ. மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு: இன்று விசாரணை
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளைமத்திய அரசிடமே அல்லது தனிப்பட்ட ஏஜன்சியிடமோ ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதானவிசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து திமுக எம்.பியான குப்புசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகளை தனி நீதிமன்றத்தில்நடத்த தனிப்பட்ட சிறப்பு அரசு வக்கீலை நியமிக்க உத்தரவிடவேண்டும்.
இந்த இரண்டு வழக்குகளையும் மத்திய அரசின் உள்துறையிடமோ அல்லது தனிப்பட்ட ஏஜன்சியிடமோஒப்படைக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, சுப்புலட்சுமிஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணையை இன்று நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அதனால் இன்று விசாரணை நடக்கஉள்ளது.












Click it and Unblock the Notifications