மேட்டூர் அணை நீர் குறைவால் வெளியே தெரியும் கோவில்கள்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் அணையில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர்கோவில் கோபுரமும், மாதா கோவிலும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. இவற்றைப் பார்ப்பதற்காகபொதுமக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியில் மாதா கோவிலும், ஜலகண்டேஸ்வரர் கோவிலும் உள்ளன.அணையில் தண்ணீர் இல்லாத போது மட்டுமே இவற்றைப் பார்க்க முடியும்.
தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையொட்டி இரு கோவில்களும்தலைகாட்டத் தொடங்கியுள்ளன.
இவற்றைப் பார்ப்பதற்காக மேட்டூர் மக்கள் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இன்னும் சில நாட்களில் தண்ணீர்வற்றி விடும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் பிறகு அணைக்குள் இறங்கிச் சென்றே கோவில்களைப்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications