தலித் தொகுதிகளில் நிறுத்தப்பட்ட தேர்தல்: போராடத் தயாராகும் திருமாவளவன்
சென்னை:
தலித் தொகுதிகளில் நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி பஞ்சாயத்துக்களில் உள்ளாட்சித் தேர்தல்நடைபெறவில்லை. இந்த இடங்களில் தேர்தலை நடத்தக் கோரி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திருமாவளன்இன்று சென்னையில் கூட்டினார்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக உட்பட பல கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்குத் தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்துதிருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் நடக்காத இந்தத் தொகுதிகளில் விரைவில் தமிழக அரசு தேர்தல் நடத்த தகுந்த நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
வரும் 31ம் தேதிக்குள் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைக் கழகம் ஆகியவற்றை அழைத்துதேர்தல் நடத்துவது குறித்து தமிழக அரசு விவாதிக்க வேண்டும்.
இல்லையென்றால் பிப்ரவரி 4ம் தேதி அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து மதுரை கலைக்டர் அலுவலகம் முன்புகண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
இந்த இடங்களில் எல்லாம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததாலேயே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது என்று திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications