வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச் சூடு
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தமிழக மீனவர்கள் மீது ஹெலிகாப்டரில் வந்த இலங்கை ராணுவத்தினர்சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 9 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கியுள்ளது. இதனால் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரிபோன்ற பல்வேறு மாவட்டங்கிளில் இருந்து மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி 65 பைபர் படுகு, 40 கண்ணாடி இழைப் படகு, 60 வல்லம், 80 லாஞ்சர் மற்றும்200க்கும் மேற்பட்ட படகுகள் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றன.
இதில் தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கு சொந்தமான படகில் செல்வம்(25), லெனின் (21), சம்பத்குமார் (21), குழந்தைவேல் (37) ஆகிய நான்கு பேரும், இன்னொரு படகில் பிச்சையா(27), ரவி (31), முருகையன் (35), ராஜ்மோகன் (20), அண்ட்ரூஸ் (33) ஆகியோரும் மாலை 5.30க்கு வலை விரித்துமீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து வந்து மீனவர்களின் படகுகளை நோக்கிசராமாரியாக குண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் மயிரிழையில் உயிர் தப்பிய மீனவர்கள் உயிருக்கு அஞ்சி வலைகளை சுருட்டிக் கொண்டு கரையை நோக்கிவந்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான கப்பல் ஒன்று இவர்களது படகின் மீதுமோதி கட்டை மற்றும் நைலான் கயிறுகளால் மீனவர்களை அடித்துக் காயப்படுத்தினர்.
இதில் படுகாயமடைந்த 9 மீனவர்களும் கரை திரும்பி விட்டனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தநூற்றுக்கணக்கான மீனவர்களும் மீன் பிடிக்காமல் கரைக்குத் திரும்பினர்.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால்அந்த பகுதியில் பரபரப்பமும், பதட்டமும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications