For Daily Alerts
Just In
காஷ்மீரில் பலியான தமிழக வீரரின் உடல் கோவை வந்தது
உதகமண்டலம்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பசுவராஜின் உடல்கோயம்புத்தூருக்குக் கொண்டுவரப்பட்டது.
பி.எஸ்.எப்பின் 171வது பட்டாலியனைச் சேர்ந்த இவர் தீவிரவாதிகள்
நடத்திய தாக்குதலில் பலியானார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவைக்குக் கொண்டு வரப்பட்ட இவரது உடலை தமிழகஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி பெற்றுக் கொண்டார். மாவட்ட உயர் அதிகாரிகளும் அப்போதுஉடனிருந்தனர்.
இந்த வீரரின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கும் என முதல்வர் பன்னீர்செல்வம்அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, January 26, 2002, 5:30 [IST]