For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் கோவில் நிலத்தைத் தர முடியாது: வாஜ்பாய் உறுதி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

எக்காரணத்தைக் கொண்டும் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை விசுவ ஹிந்து பரிஷத்திடம் மத்தியஅரசு கொடுக்காது என்று பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உறுதியுடன் கூறிவிட்டார்.

பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி, விசுவ ஹிந்து பரிஷத்இயக்கத்தினர் ராமர் கோவில் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வரும் மார்ச் 12ம் தேதி ராமர் கோவில் கட்டும் பணி ஆரம்பமாகும் என்றுஏற்கனவே விசுவ ஹிந்து அமைப்பினர் கூறியிருந்தனர்.

ஆனால், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை மத்திய அரசு கொடுத்துவிட்டால் அந்தத் தேதிக்கு முன்னதாகவேகட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் அவர்கள் நடத்தியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பது தொடர்பாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 6,500தலைவர்கள் கடந்த 21ம் தேதி காலை அயோத்தியிலிருந்து டெல்லிக்கு "எச்சரிக்கை" பேரணி மேற்கொண்டனர்.

இந்தப் பேரணி நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்தது.

பேரணியில் வந்த வி.எச்.பி. தலைவர் அஷோக் சிங்கால் உள்பட 6 சாதுக்கள் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாகவாஜ்பாயைச் சந்தித்து பேசினர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை துவங்குவதற்கு வசதியாக உடனடியாக அதற்கான நிலத்தைத்தங்களிடம் தருமாறு அவர்கள் வாஜ்பாயை வற்புறுத்தினர்.

ஆனால் சர்ச்சைக்குரிய அந்த இடத்தை விசுவ ஹிந்து பரிஷத்திடம் கொடுப்பதற்கு வாஜ்பாய் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் ஏற்கனவே எதிர்க் கட்சிகளிடமும் பேசி முடிவெடுத்து விட்டார்.

அந்த நிலத்தை அரசு தராவிட்டாலும்கூட மார்ச் 12ம் தேதி எப்படியும் அவ்விடத்தில் கோவில் கட்டுமானப்பணியைத் துவக்கி விடுவோம் என்றும் விசுவ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X