பாகிஸ்தானும் விரைவில் ஏவுகணை சோதனை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
கடந்த வெள்ளிக்கிழமை அக்னி ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த இந்தியாவைத் தொடர்ந்துபாகிஸ்தானும் விரைவில் தன்னுடைய ஷஹீன்-2 என்ற ஏவுகணையைப் பரிசோதித்துப் பார்க்கவுள்ளது.
தற்போது எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் அக்னி ஏவுகணையை சோதனை செய்துள்ளஇந்தியாவை உலக நாடுகள் கண்டிக்கவில்லையென்றால் விரைவில் பாகிஸ்தான் இந்த ஏவுகணைகளைச் சோதனைசெய்யும் என்றும் அச்செய்திகள் கூறின.
ஏவுகணை சோதனை செய்வதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளரான மேஜர் ஜெனரல் ரஷீத் குரேஷி கூறியுள்ளார்.
ஷஹீன் ஏவுகணை சுமார் 2,500 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று தாக்க வல்லது என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications