கடலூரில் ஈவ் டீசிங்: இளம்பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூரில் ஈவ் டீசிங் கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் இந்திராணி (16). இந்திராணி ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்லும் வழியில் அங்கு நின்று கொண்டிருந்த அய்யனார்,பெருமாள், ராஜிவ்காந்தி உட்பட நான்கு பேர் சேர்ந்து இந்திராணியை கிண்டல் செய்தார்.

தன்னை சிலர் கேலி செய்வது குறித்து தனது தாய் மலர்க்கொடியிடம் இந்திராணி கூறி அழுதார். உடனேமலர்க்கொடி மகளைக் கேலி செய்தவர்களிடம் சென்று சண்டை போட்டார்.

அதற்கு இந்திராணியை கேலி செய்தவர்கள் மலர்க்கொடியின் குடும்பத்தையும், இந்திராணியையும் அசிங்கமானவார்த்தைகளால் திட்டினர்.

இதனால் மனமுடைந்த இந்திராணி பூச்சி மருந்தை குடித்து விட்டார். உடனடியாக அவரை அரசு மருத்துவனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை கடலூர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது இந்திராணியின் தாயார் நடந்த சம்பவங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கினார். உடனே அவர்நடவடிக்கை எடுக்காத போலீசாரை கடிந்து கொண்டு, கலெக்டரை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறுகேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இந்திராணி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்திராணியை கேலி செய்து அவரைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 8ம் வகுப்பு மாணவன் பெருமாள்என்பவனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+