For Daily Alerts
Just In
ஜெ.க்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ய வீரமணி முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில்ஈடுபட திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.
திராவிடர் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு தீவிர ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபடுவது என இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆண்டிப்பட்டி தொகுதிக்கு திராவிடர் கழகம் சார்பாக பிரசாரக் குழு ஒன்றை அனுப்பி வைக்கவும்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கி. வீரமணி தலைமை வகித்தார்.
Story first published: Tuesday, January 29, 2002, 5:30 [IST]