ஆண்டிப்பட்டி தேர்தல்: "தலித்துகள் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை தேவை"
சென்னை:
ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தலில் தலித் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபுதிய தமிழகம் கட்சியின் தலைவரும், ஆண்டிப்பட்டி வேட்பாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியான மிருத்யுஞ்சய் சாரங்கிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டுமானால் அங்கு தேர்தல்கமிஷன் விழிப்புணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளேன்.
தலித் மக்கள் சுதந்திரமாக தங்களது ஜனநாயகக் கடமையாற்றும் வகையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் மத்தியரிசர்வ் போலீஸ் படைகள் அங்கு அனுப்பப்பட வேண்டும். புற ராணுவப் பிரிவுகளும் அங்கு அனுப்பப்படவேண்டும்.
ஆண்டிப்பட்டி தொகுதிக்குள் அடங்கியுள்ள கடமலை, வருசநாடு, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும்தலித் மக்கள் கடந்த கால தேர்தல்களில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த நிலை மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமிகூறினார்.












Click it and Unblock the Notifications