விரைவில் நிரந்தர போர்நிறுத்தம்: புலிகள் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் விரைவில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரானஆன்டன் பாலசிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள பாலசிங்கத்தை நேற்று நார்வே தூதுக் குழுவினர் சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தைநடத்தினர்.
நிரந்தரப் போர்நிறுத்தத்திற்காக இரு தரப்பிலும் உள்ள நிபந்தனைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போதுவிவாதிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கைகளை ஓஸ்லோவிடம் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமர்ப்பித்துள்ளதாகபாலசிங்கம் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில் ஆரம்பித்த ஒரு மாத காலப் போர்நிறுத்தம், பிப்ரவரி 24ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாகவே நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று பாலசிங்கம்கூறினார்.












Click it and Unblock the Notifications