திமுகவுக்கு ஆதரவளிக்க மதிமுகவுக்கு ராமதாஸ் அழைப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை புறக்கணித்த கட்சிகளும், மதிமுகவும் சேர்ந்து திமுக வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து மதிமுகவும் திமுகவைஆதரிக்க வேண்டும்.
என்னுடைய பொது வேட்பாளர் கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்காதது துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
தேர்தலில் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்போட்டியிடக் கூடாது என்று ஒரு சட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் 4 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது ஆண்டிப்பட்டியில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்போம்.
அயோத்தி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னர் தான் சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைப்பதுபற்றி பேச முடியும் என்று பிரதமர் கூறியிருப்பது சரியான முடிவு.
கர்நாடகாவில் போட்டியிடும் தேவகவுடாவுக்கு கூட்டணி தர்மத்தைக் கடந்தும் கம்யூனிஸ்டுகள் ஆதரவுஅளித்துள்ளனர்.
திருச்சி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து பலர் உயிரிழக்கின்றனர். இதற்கு அரசுஉரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் என் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று ராமதாஸ்கூறினார்.












Click it and Unblock the Notifications