அச்சரப்பாக்கம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான பாமகவைச் சேர்ந்த ஏ. செல்வராஜ் இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 47.
மூளைக் காய்ச்சல் நோய் காரணமாக சென்னை மருத்துவமனை ஒன்றில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தசெல்வராஜ், இன்று அதிகாலை 5.30 மணியளவில் இறந்தார்.
மதுராந்தகம் அருகே உள்ள அவருடைய சொந்த ஊரான ஆத்தூருக்கு செல்வராஜின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
செல்வராஜுக்கு மனைவியும் 5 மகள்களும் உள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் தன்னை எதிர்த்த திமுக வேட்பாளர் முருகேசனை விட15,000 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் செல்வராஜ் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications