For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவன் இறந்த துக்கம்: பெண், 2 குழந்தைகள் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கணவனை யாரோ கொன்று விட்டதால் மனமுடைந்த ஒரு பெண், தன் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டார்.

சென்னை வியாசர்பாடியில் உள்ள சர்மாநகரைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி விண்ணரசி. இவர்களுக்கு2 பெண் குழந்தைகள் உண்டு.

சமீபத்தில் மைக்கேலை யாரோ சிலர் தாக்கி கொலை செய்து விட்டனர். இதனால் அவரது மனைவி மிகவும்மனமுடைந்தார்.

அவர் தன் மீதும், தனது 2 பெண் குழந்தைகளின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய வீடும் தீயில் எரிந்துசாம்பலானது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X