ஆனந்த விகடன் மீது தமிழக அரசு வழக்கு
சென்னை:
ஆனந்த விகடன், நெற்றிக் கண் மற்றும் ஒரு ராஜஸ்தான் பத்திரிக்கை ஆகியவை மீது தமிழக அரசு நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பான மனு ஒன்றை தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில்சமர்ப்பித்தது.
நீதிமன்றத்தை அவதூறு செய்யும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய பத்திரிக்கைகளில்கட்டுரைகள் வெளியிட்டுள்ளதாகவும், ராஜஸ்தான் பத்திரிக்கையில் ஆட்சேபகரமான வகையில் கார்ட்டூன்வரையப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர்முன் விசாரணைக்கு வந்தது.
ஆனந்த விகடன் மற்றும் நெற்றிக் கண் பத்திரிக்கை ஆசிரியர்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் இதுகுறித்துவிளக்கமளிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் பத்திரிக்கை ஆசிரியர் அடுத்த ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்கவேண்டும் என்று மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையின்போது இப்பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அப்போது சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன் தனக்கு வானளாவியஅதிகாரம் இருப்பதாகக் கூறிக் கொண்டு ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியத்தைக் கைது செய்யஉத்தரவிட்டார்.
எம்.எல்.ஏக்களை விமர்சனம் செய்து விகடனில் வந்த காட்டூனுக்கு எதிராக அந்த நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications