For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா தாக்குதல்: மேலும் ஒருவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா:

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை கொல்கத்தாபோலீசார் கைது செய்துள்ளனர்.

ஜாவித் என்கிற ஜமாலுதீன் நசீர் என்ற அந்த நபர் கிழக்கு கொல்கத்தாவில் ஒளிந்து கொண்டிருந்தபோது, நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு போலீசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டான்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நசீர்தான் மோட்டார் சைக்கிள்களைக் கொடுத்து உதவியுள்ளான்.

இன்று கொல்கத்தா தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் நசீர் ஆஜர்படுத்தப்பட்டான். வரும் பிப்ரவரி 13ம் தேதி வரைஅவனைப் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தேசத்திற்கு எதிராகச் சதி செய்ததாக பல்வேறு பிரிவுகளின் கீழ் அவன் மீது இப்போதைக்கு வழக்குதொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை ஜார்க்கண்ட்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 2 பேருமேலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என்றுஉறுதியாகத் தெரிய வந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அத்வானி இன்று கூறினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட இந்த 2 பேரும் அமெரிக்க மையத் தாக்குதலில் முக்கியத் தொடர்புடையவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X