ரீட்டா வழக்கு: தேடப்பட்ட விபச்சாரி கைது
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
ரீட்டா கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த விபச்சார விடுதி தலைவி ஈஸ்வரி செஞ்சியில் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரியை செஞ்சி சிறைச்சாலையில் வைத்து 5 சிறை வார்டர்கள் கற்பழித்தனர். இந்தவழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 5 சிறை வார்டர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரீட்டா மேரியை விபச்சாரத்துக்காக பணம் கொடுத்து வாங்கிய விபச்சார விடுதி தலைவி ஈஸ்வரியை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈஸ்வரியை செஞ்சியில் கைது செய்துதிண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தினர்.
ஈஸ்வரியை 15 நாள் சிறைக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதன்படி நேற்று ஈஸ்வரிவிழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications