வண்டலூர் திகில்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிங்கம் (?) தப்பிய செய்தி காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை அருகே வண்டலூர் உயிரியல்பூங்கா மூடப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து சிங்கம் தப்பிச் சென்று விட்டதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு செய்திபரவியது. ஆனால் சிங்கம் ஏதும் தப்பவில்லை என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் தப்பிய விலங்கு எது என்று தேடும் பணி தொடர்ந்தது. தப்பியது சிங்கமல்ல, சிறுத்தையாகஇருக்கலாம் என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் அந்த விலங்கு, பூங்காவிலிருந்து தப்பியதல்ல, வேறுபகுதியிலிருந்து பூங்காவிற்குள் அந்த விலங்கு வந்துள்ளது என்று தற்போது கூறப்படுகிறது.

அந்த மர்ம விலங்கைப் பிடிப்பதற்கான துரித நிடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மர்ம விலங்கு நடமாட்டம் காரணமாக விலங்கியல் பூங்கா கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது. திடீரெனவிலங்கியல் பூங்கா மூடப்பட்டு விட்டதால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள், சென்னை நகர மக்கள் பெரிதும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பலருக்கு பூங்கா மூடப்பட்டிருப்பது கூட இன்னும் தெரியவில்லை. நகரிலிருந்து பஸ், வேன்கள் மூலம் நீண்டபயணத்திற்குப் பிறகு வண்டலூர் வரும் அவர்கள் பூங்கா மூடப்பட்டிருப்பது தெரிந்து வெறுப்படைகின்றனர்.

பூங்கா மூடப்பட்டுள்ளது குறித்து பத்திரிக்கைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டால் நன்றாக இருந்திருக்கும் என்றுஅங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள் கூறுகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+