வங்கக் கடலில் திடீர் புயல் சின்னம்
சென்னை:
வங்கக் கடலில் திடீரென்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை) பரவலான மழை பெய்யும் என்று தெரிகிறது.
வங்கக் கடலின் தெற்கு மற்றும் தென்மேற்குத் திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
நேற்றும் சென்னையில் லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. பின்னர் இரவு 8.45 மணியளவில் திடீரென்று மழைபெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் ரோடுகளில் உள்ள பள்ளங்களிலும் மழை நீர் ஆங்காங்கேதேங்கியுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் மழையோ அல்லது இடியுடன் கூடியமழையோ பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications