சரவணபவன்ராஜகோபால் மீண்டும் சிறையில் அடைப்பு
சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹோட்டல் சரவண பவன் அதிபர்ராஜகோபால் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜீவஜோதி விவகாரம் காரணமாக கைதாகியுள்ள ராஜகோபால், உடல்நலக்குறைவு காரணமாக தன்னை ஜாமீனில் விடுதலைசெய்யுமாறும், மருத்துவமனையில் சேர அனுமதிக்குமாறும் உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
ஆனால் ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம், அவரை விஜயா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதித்தது.
இதையடுத்து டிசம்பர் 22ம் தேதி ராஜகோபால் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நீண்ட காலம்மருத்துவமனையில் தங்கியிருந்தால் சாட்சிகளை கலைக்க ராஜகோபால் முயற்சிக்கலாம் என்று வேளச்சேரி போலீஸார்உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதே சமயம் தன்னை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்குமாறு கோரி ராஜகோபால் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இரு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதி மலை சுப்ரமணியம், ராஜகோபாலின் கோரிக்கையை நிராகரித்தார். பின்னர் உடனடியாகராஜகோபாலை மத்திய சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜகோபால் மீண்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications